சுத்தமான கடவுள்

கவிதை அகல் விளக்கை‘சுத்தமான’ எள் எண்ணையால் ஏற்றினால்சனி சமாதான உடன்படிக்கைக்கு வருவாராம் கடைவீதிகளைச் சலித்தால்தங்க விளக்குகூட கண்முன்னே மின்னுகிறதுமண்விளக்கென வாய் திறந்தால்அதிசயப்பிறவி போல் பார்க்கிறார்கள்எங்கே போனார்கள் மண்பாண்டக் கலைஞர்கள்..?அறுபது மைலுக்கு அப்பால் போனால்‘சுத்தமான’ அகல்விளக்கு கிடைக்குமாம் எள் எண்ணை கேட்டால்எள் படம் போடப்பட்டஎண்ணற்ற பைகள் வரிசையில் கிடந்தனஎங்கே போனார்கள் செக்காட்டுவோர்.?இருபது மைல் கடந்து போனால்‘சுத்தமான’ எண்ணெய் கிடைக்குமாம் திரி கேட்டால்‘சுத்தமான’ பஞ்சுத்திரி கிராமத்தில்தானாம்மறைந்துவிட்டதா பருத்தி உற்பத்தி..? வெறுப்பின் உச்சத்தில்பொறுப்பாய் வீடு வந்துகிண்ணத்தை விளக்காக்கிநீரை எண்ணையென வார்த்துபூவைத் திரியென மிதக்கவிட்டுகோபத்தைத் தணலாக்கிப் பற்ற வைக்கபூத்திரியில் ஒளிர்கிறார் ‘சுத்தமான’ கடவுள்