மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைக்கின்றன! முத்தரசன் ஆவேசம்!
தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு செயல்பாடுகள் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை அறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனைச் சந்தித்தோம்… “ கொரோனா கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் முக்கியமாக தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?” “கட்சியில் பதவிப் போட்டி, ஆட்சியில் அதிகாரப் போட்டியும் தானென்ற ஆளுமையை முன்னிலைப் படுத்தவேண்டும் என்பதிலும் ஒட்டுமொத்த ஊடகங்களும் தங்களை முன்னிறுத்தியே செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் மூத்த அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். தமிழக அரசியலே இவர்களது ஆளுமைக்குக் கீழ் செயல்படுவது போன்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் சொல்வதை அமைச்சர்கள் கேட்பதில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையிலும் பல மந்திரிகள் ஊடகங்கள் பக்கம் தலை வைத்துக்கூடப் படுத்தது கிடையாது. அவரது மறைவிற்குப் பிறகே தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற பழமொழிக்கு ஏற்ப, கட்சியில் இருப்பதாலேயே நாங்களும் முதலமைச்சருக்கு இணையானவர்கள் என்கிற எண்ணத்தில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வாய்க்கு வந்ததைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்கிற தொனியில் செயல்பட்டு வருகின்றனர். உதாரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அறிக்கை கொடுக்கிறார் ஒரு அமைச்சர். பிறகு அரை மணி நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தத் தடையில்லை என்று அவரே அறிக்கை விடுகிறார். இவர்கள் அரசையும் ஊடகங்களையும் விளம்பர தூதுவர்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தான் உண்மை. மற்றபடி இவர்களின் செயல்பாடுகள் பற்றிக் கூறுவதற்கு ஒன்றுமில்லை.” “கொரோனா உயிரிழப்பு விகிதங்களை அரசு மறைகின்றதா?” “2014ம் ஆண்டு சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது போது ஏற்பட்ட உயிரிழப்பை இருட்டடிப்புச் செய்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதற்கடுத்ததாக டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மறைக்க மர்ம காய்ச்சல் மரணங்கள் என கணக்குக் காட்டினார்கள். தங்களது இயலாமை வெளி உலகிற்கு தெரியக் கூடாது என்பதற்காகவே இந்த மரணங்கள் மறைக்கப்பட்டன. அதுபோலத்தான் தற்போதைய கொரோனா மரணங்களும் மறைக்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து இவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு புள்ளி விபரமும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. உதாரணமாக, சென்னை ஐசிஎஃப் ரயில்வே மருத்துவமனையில் கொரானா தாக்குதல் காரணமாக 27 பேர் மரணமடைந்துள்ளர். ஆனால் மாநகராட்சிப் பதிவேட்டில் இது காட்டப்படவில்லை. ஒருகட்டத்தில் இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுபற்றி விசாரணை செய்யக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் கூறியிருந்தார். தமிழக அரசு அறிவித்துள்ள மரணப் பட்டியலில் குளறுபடிகள் உள்ளது என்பதை இதன் மூலமே உறுதிப்படுத்த முடிகிறது. கல்வி, சுகாதாரத்தில் முன்னேறிய ஒரு மாநிலத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் என்றால், அது அந்த ஆட்சியாளர்களின் ஆளுமைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என்று அனைவரும் அறிந்ததே. தங்களது தோல்வியை மறைப்பதற்காகவே தற்போதைய கொரோனா உயிரிழப்புகளை இந்த அரசு மூடி மறைக்கிறது.” “முதல்வரும், அமைச்சர் விஜயபாஸ்கரும் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருவது பற்றி…? “இந்த அரசு வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் முரண்பட்டே வருகின்றன. உதாரணமாக, “பரிசோதனைக்கு உட்படுத்தப் படும் நபர் மட்டுமின்றி அவர் சார்ந்த குடும்பத்தாரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகிறார். சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அதற்கு வேறு மாதிரியாக ஒரு விளக்கம் கொடுக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் முற்றிலுமாக முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிக்கிறார். இவர்கள் சொல்லும் தோராயக் கணக்குகளை வைத்து போகிற போக்கில் ஒரு புள்ளி விவரத்தைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார் முதலமைச்சர். சமூகப் பரவல் வரக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமும். ஆனால், அதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை இவர்கள் விலக்க வேண்டும் அல்லவா? சமூகப் பரவல் இல்லை என்று கூறும் வேளையில் சென்னையில் ஏன் இவ்வளவு உயிர்ப்பலிகள் அதிகரித்து வருகிறது? அம்மா வழியில் ஆட்சி என்று கூறும் எடப்பாடியார் ஆட்சியில் தமிழ்நாட்டு தனியார் மருத்துவமனை களில் கொரோனா பரிசோதனை செய்ய 4,500 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மராட்டிய அரசு 2200 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொறுப்பும், வேட்கையும் கொண்ட ஆட்சியாளர்கள் இருந்தால் அனைத்தும் சாத்தியம் தான். ஆனால் பாலைவனத்தில் நீர் தேக்கி, அந்த நீரைக் கொண்டு விவசாயம் செய்யப்போகிறோம் என்கிறது முதலமைச்சரின் இந்த அறிக்கை. யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பதை அப்படியே ஊடகங்கள் முன் படித்துக் காட்டுகிறார் இவர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தினம் தினம் ஊடகங்கள் முன் முன்னுக்குப் பின் முரணான பல செய்திகளைக் கூறி வருகிறார். தற்போது மாநில அமைச்சரவையில் யார் பெரியவன் என்ற அதிகாரி போட்டி வலுத்து வருகிறது. அதன் வெளிப்பாடுகள்தான் தற்போது வந்து கொண்டிருக்கும் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகள். என்னை பொறுத்தவரை கொரோனா விவகாரத்தில் தமிழகத்தில் சுகாதாரத்துறை முற்றிலுமாக தோற்றுப் போய்விட்டது. இதற்குப் பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.” “மாநில அரசுக்கு வரவேண்டிய தேசியப் பேரிடர் நிதி மற்றும் ஜிஎஸ்டி வருவாய்ப் பங்கீடுகள் இன்னும் கிடைத்திடாத இந்தச் சூழலில் மாநில அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?” “கடுமையான நிதி நெருக்கடியில் தமிழக அரசு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தச் சூழலில் மத்திய அரசு ஒதுக்க வேண்டிய மாநில பேரிடர் நிதி, தேசியப் பேரிடர் நிதி மற்றும் தமிழகத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி வரி வசூல் பங்கை உடனடியாகக் கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், மத்திய அரசு தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கு 5,000 கோடி ரூபாயை கேட்டிருக்கிறோம் என்று கூறியிருந்தார். இவர்கள் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களிடம் தங்களது உரிமையைக் கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல, இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் தமிழகத்திற்கு நாம் கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. கொரோனா தொற்று அதிகப்படியாக இருக்கும் வேளையில் எங்களுக்கு 18 ஆயிரம் கோடி தேவை என்று முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ள போதிலும், மத்திய அரசு மக்களையும் மாநில அரசையும் புறக்கணிக்கிறது என்பது தான் உண்மை.” “ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து அமைச்சர் தங்கமணி கூறியுள்ளது பற்றி?” “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். ஆனால் தற்போதைய சூழலில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் இருக்கிறதோ இல்லையோ, மதுபானக் கடைகளில் என்னென்ன வகை மதுபானங்கள் இருக்க வேண்டும் என்பதை உடனடியாக சுற்றறிக்கை மூலம் கண்காணிக் கின்றனர். மக்களுக்குத் தேவையான காய்கறிகள், ரேஷன் பொருட்களை ஆன்லைன் மூலமாகக் கொடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் பாராட்டி இருக்கலாம். ஆனால் சாராயக் கடைகள் மூலமாக வரும் வருமானம் தான் பிரதான வருமானம் என்ற நினைப்பில் அது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர் களை என்னவென்று சொல்வது?!” “ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்களில் மாற்றம் செய்வது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்றா?” “ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களைத் தமிழில் மாற்றம் செய்ய வேண்டு மென்று பல வருடங்களாகக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது வரவேற்கக்கூடிய ஒன்று என்றாலும், சாவின் விளிம்பில் உள்ள மனிதர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதைப்பற்றி சிந்தித்துச் செயல்படுவதை விட்டுவிட்டு, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இது தேவையற்றது என்றே நினைக்கிறேன். கொரோனா விசயத்தில் அரசின் தோல்வியைப்பற்றி மக்கள் பேசாத வண்ணம் பிரச்சினைகளைத் திசை திருப்பும் நடவடிக்கை இது.” “கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில், பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்படுவதன் காரணம் என்ன?” “கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 16 டாலர்கள் வரை வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக விலை வீழ்ச்சியின் பலன் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இதுதான் உண்மையான ஒரு அரசு மக்களுக்கு செய்யும் சேவையாகும். ஆனால் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைக்கின்றன. மாநில அரசுக்கு மதுகடை களால் வருமானம் வேண்டும். மத்திய அரசைப் பொருத்தவரை பெட்ரோல் டீசல் மூலமாக மத்திய அரசின் கஜானா நிறைய வேண்டும். இவர்கள் ஆட்சியாளர்கள் போல செயல்பட வில்லை. கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் போல செயல்பட்டு வருகிறார்கள்.” “கடந்த ஆறு ஆண்டுகால மோடி ஆட்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு மதிப்பீடு செய்கிறது?” “யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். அதுபோலத்தான் பாஜகவும் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் இது ஆர்எஸ்எஸ் அரசு என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறி வருகிறது. அதுபோல தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளான ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளை பாஜகவின் சொந்த நலனுக்காகப் பாடுபடும் அமைப்புகளாக மாற்றி வருகின்றனர்.” “விவசாய நாடான இந்தியாவில் விவசாய சங்கங்கள் அதிகம் வலுப்பெறவில்லையே? விவசாயி களை ஒருங்கிணைக்க என்ன திட்டங்கள் உள்ளன?” “இந்தியா விவசாய நாடு. விவசாயத்தைச் சார்ந்த மக்கள் அதிகமாக உள்ளனர். அதுபோல அதிகமாக விவசாயிகள் மரணிப்பதும் இந்த நாட்டில்தான். விவசாயிகள் ஒருங்கிணைப்பிற்கு, விடுதலைப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் துரை மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகங்கை குணசேகரன், இவர்கள் தலைமையில் பல்வேறு கட்டப் போராட்டங்களை செய்து வந்துள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து வருகிறோம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2020 தனியார் மின்சார விநியோகம் தொடர்பான விசயத்தில் ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுக்க, ஒரு பெரிய கூட்டமைப்பை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயன்று வருகிறது.” “மக்கள் நலக்கூட்டணி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா?” “கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மக்கள் நலக் கூட்டணி செயல்பாடாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் இந்தக் கூட்டணியை ஒருங்கிணைத்த முக்கிய