அகப்படாத ஒன்று

அகப்படாத ஒன்று

சிறுகதை சில மாதங்களாக இப்படித் தூக்கமில்லாமல் தவிப்பது, பெரும் ரோதனையாகவே பட்டது. வாழ்க்கை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று தெரியாமல், கண்களை இறுக்கிக் கட்டிவிட்டதுபோல் அல்லாடியது மனது. ஏதோவொரு கோபம். பல நினைவுகளையெல்லாம் ஒன்றுதிரட்டி, அவை ஏளனமாகச் சிரிக்கும்போதெல்லாம் அறைக்குள்ளிருக்கும் டேபிள், முகம் பார்க்கும் கண்ணாடி, டம்ளர், தலகாணி, போர்வையென்று, கையில் கிடைக்கும் பொருட்களெல்லாம் தூக்கியெறியப்படும். அதில் ஒருசில மதுபாட்டில்களும் அடங்கும். முன்பைவிடவும் இப்போதெல்லாம் பாட்டில்கள் அதிகமாகச் சிதறுகின்றன. அதொருவகையில் ஆறுதல் கொடுத்தாலும் போதாமையாகவே ஆட்டிப் படைக்கிறது. சத்தம் போட்டு ‘ஓ..’வென்று கத்த வேண்டும்; அலற வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. தன்னுடைய இருக்கைகளையும் மூர்க்கத்தனமாக இறுக்கிக்கொண்டான். விரல்கள் சுடக்கு விட்டுக்கொண்டன. நடுராத்திரியில் ஏன் இவன் வெறி பிடித்தவனாகக் கத்துகிறான் என்று எண்ணி பக்கத்து அறையிலிருந்து ஆட்கள் வந்தால் என்ன செய்வது – சொல்வது? தன் நடவடிக்கையின் மீது யாருக்காவது சந்தேகம் வந்துவிடுமோ? என்கிற பயம், உள்ளூர பூதமாகவே வளர்ந்து, விரவிக்கிடக்கிறது. பேய் பிடித்ததுபோல், கட்டிலில்மேல் எழுந்து நின்றான். பின் சம்மணம் போட்டு உட்கார்கிறான். கால்நீட்டி மல்லாக்கப் படுத்துக்கொள்கிறான். திரும்பவும் எழுந்து உட்கார்கிறான்; நிற்கிறான். ஏதோ சைகை செய்து, தனக்குத்தானே பேசிக்கொள்கிறான். சன்னலுக்கருகில் வந்து வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்துத் திகைக்கிறான்; சிரிக்கிறான். அதொரு அற்புதமான இயற்கைச்சூழல் மிகுந்த மலைப்பகுதி. கிராமப்புறக் குடியிருப்பு என்றாலும் இருட்டு – சுடுகாட்டுத்தனமான அமைதி – இரவு நேரங்களில் மட்டும் அதற்கு அடிமையாகிப் போகிறான். ஆங்காங்கே, தெருவில் நடபட்டிருக்கும் சிற்சில போஸ்ட் விளக்குகள் மட்டும் மஞ்சள் நிற வெளிச்சத்தை வெளிக்காட்டிக்கொண்டாலும் அதெல்லாம் அவன் மூளையில், பிணத்தை எரிக்கும்போது மேலெழும்பும் கருஞ்சிவப்பு மஞ்சள் நிற தீ ஜுவாலையாகத்தான் பீடித்திருந்தது. அப்பீடித்தலின் காட்சிக்குள் மூழ்கிப்போனதால், உடல் முழுவதும் வியர்த்தொழுகியது. கண்கள், முகமென்று வடிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, மீண்டும் – மீண்டும் அதே காட்சியை அழுந்தப் பார்த்தான். வெளிச்சத்தில் தெரிந்த மரங்கள், தற்சமயம் பெண்களாக மாறிக்கொண்டன. அந்தப் பெண்கள் அவனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவனும் சிரிக்கிறான். சிரித்துக்கொண்டே அழவும் – பின் சிரிப்பும். இதே நிகழ்வுதான் மாறி மாறி நகர்கிறது, சிலமணி நேரமாக. அதில் இடம்பெறும் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. வெவ்வேறு வயது வித்தியாசத்தில், வெவ்வேறு முக அடையாளத்தில், தோள், நிறம், சிரிப்பு, கோபம், முகபாவனைகளைக் காட்டும் விதம், தோற்றம் என்று வகைப்படுத்தித் தோன்றினாலும் அவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் எந்தவொரு உறவோ, தொடர்போ கொண்டவர்கள் இல்லை. ஆனால், அப்பெண்களெல்லாம் அவனுக்கு ஒருவகையில் தெரிந்த, பழகிய முகங்களாகவே உணர்வுகளுக்குள் ஊடுருவியிருந்தார்கள். அதில், முதலில் நிற்பவளின் பெயர் செரின். அவளைப் பற்றி நிறையவே சொல்லியாக வேண்டும். அவள் வசித்த ஊரில் பிரச்சனை இருந்திருக்கிறது போலும். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே குடிவந்து விட்டார்கள். அவன் வீட்டிற்கு நேரெதிர் வீடுதான். அவளை முதன் முதலில் சந்தித்தது, அந்த மெடிக்கல் ஷாப்பில்தான். ஏதோ வாய்க்குள் நுழையாத பெயர்கொண்ட மாத்திரைகளை வாங்கிக்கொண்டிருந்தாள். பார்த்தவுடன் ஒரு மெல்லிய மென்முறுவல். அவ்வளவுதான், நகர்ந்துவிட்டாள்.அதன் பின்பு ஒருவாரம் கண்ணில் படவில்லை. திடீரென்று ஒருநாள் அவளே நேரடியாக வந்து பேசினாள். “ஒரு வாரமா என்னைத் தேடுனீங்களோ?” “இல்லையே.. அப்டிலாம் ஒன்னுமில்லை. யாரு சொன்னது?” “யாருமில்ல. ஆனா உங்க மொகத்தப் பாத்தா உண்மைய முழுங்குன மாரிலாயிருக்கு..” இப்படிக் கேட்டவளிடத்தில், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், அவளின் முகத்தை நேராகப் பார்க்காமல் தவிர்த்திருந்தான். “திரும்பிட்டா என்ன அர்த்தம்?” என்று சொல்லிக்கொண்டே நெருக்கத்தில் வந்திருந்தாள். அவன் மௌனமாக நின்றிருந்தான். அந்த மௌனத்திற்கு விடை எங்கு ஒளிந்துகொண்டிருக்கும்? அதைத் தேடிப் பிடிப்பதற்குள், வலது கையை இறுக்கிப் பிடித்திருந்தாள். உடல் சிலுப்பிக் கொண்டது. மென்மையான குளிர்ந்த உள்ளங்கைகள், அவனது ரோமங்களை விளையாடிப் பார்க்க அழைப்பு விடுப்பதுபோல் அரவணைத்திருந்தது. “இதுதான் உங்களுக்கு ஃபஸ்ட் டைமா?” அந்தச் சிலிர்ப்பிலிருந்து இன்னும் விடுபடாதவனாகவே, அக்குளிரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். பேசாமல், நடுரோட்டில் ஒரு மூலையில், மரத்துக்கடியில் நின்றுபேசுவது எதுவும் சரியிருக்காதென்று, விறுவிறுவென அவளின் வீட்டிற்கே அழைத்துச் சென்றாள். அய்ந்தாயிரம் கொடுக்கும் அளவிற்கு நடுத்தரமான வீடுதான். தைரியமாக அழைத்துவரும்போதே வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்தது உண்மையாகவே இருந்தது. உள்ளே வந்ததும் மேலே போட்டிருந்த ஷாலைக் கழட்டி எறிந்துவிட்டாள். “இந்தச் சேர்ல உட்காரு. நான் இப்பம் வந்துர்றன்” என்று சொல்லிவிட்டு நேராக பெட்ரூமிற்குச் சென்றாள். முதல்முறை என்பதால், ஓர் அச்சம் கலந்த பதற்றம் உள்ளூர ஊறிக்கொண்டே முட்டி மொனங்கியது. “நீ இப்பம் எங்க போற?” என்று கேட்டதற்கு, “ட்ரெஸ்ஸ மாத்திட்டு வாறன். நீ வேணா டிவி போட்டு பாத்துட்டு இரு” என்று சொன்னவளுக்கு, கதவைப் பூட்ட வேண்டுமென்ற நியாபகம் வரவில்லை. அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கதவை ‘டமால்’ என்று சத்தத்துடன் அழுந்தத் தள்ளிவிட்டுச் சென்றாள். ‘எதுக்கிப்படி தேவையில்லாம கதவ ஓங்கி அடைக்கணும்?’ திரும்பிப் பார்த்தவனுக்கு, அச்சிறிய இடைவெளியில் எல்லையில்லா ஓர் ஆனந்தக் கிளுகிளுப்பு உடலில் தொற்றிக்கொண்டது. ஓர் இளம் பெண்ணை அரைநிர்வாணமாகப் பார்த்தது அதுவே முதல்முறை. கண்ணாடியின் முன் தன்னழகை ரசித்துக் கொண்டாள். நீளமான கருநிறக் கூந்தலைக் கலைத்துக் கோதிவிட்டு, ஒவ்வொன்றாகத் தன் ஆடைகளைக் களைந்தாள். ஜீவா தன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பதைத் தனக்கு முன்னாலிருக்கும் கண்ணாடியின் வழியாக பார்த்துத் தெரிந்துகொண்டாள். இதுபோதும் என்றவளுக்கு, தன் மேனியைப் பலவாறு நெளித்து, கோவில்களில் வடித்திருக்கும் சிற்பங்களின் இணக்க நெளிவுகளையெல்லாம் தன் மேனிக்குள் கொண்டுவந்திருந்தாள். அதொருவிதமான நிர்வாண நடனமாகவே காட்சிப்படுத்தியிருந்தது. ஒரேயடியாக, நேரே சென்று லேசாகத் திறந்திருந்த கதவை முழுமையாகத் திறந்து அந்நடனத்தில் தானும் பங்கெடுத்துக் களைப்படைய வேண்டும்; அவளை இறுக்கியணைத்து, அகல விரிந்த முதுகினை நுனி நாவால் வருடி, காதுமடல், கழுத்துப்பகுதியை வெடுக்கென்று ஆப்பிளைக் கடித்துச் சுவைப்பதுபோல் சுவைக்க வேண்டும்; ஒடுங்கிய இடைமடிப்பு மட்டுமல்லாது, மேல் ஏறியிருந்த பிட்டமும் வெகுவாக நிலைகுலைய வைத்தது. ஆனால், அவனால் ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கமுடியவில்லை. பதற்றம் கலந்த ஒருவித பயம், நிலை தடுமாற வைத்தது. அது ஏன் என்றும் அவனுக்கு விளங்கவில்லை. அவள் கழட்டிப் போட்ட ஷாலை மடியில் வைத்து அமுக்கிக்கொண்டான். சிறிது நேரத்தில் ஈரமாகிப் போனது மட்டுமல்லாமல், என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. அங்கிருந்து கிளம்பிவிட்டான். மறுநாள் காலையில் ஓர் ஆர்வத்தோடு வாசலைப் பார்த்தே, கண்கள் தவம் கிடந்தன. ஒரு பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றால், எதிர் வீட்டின் வாசல் அழகாய்த் தென்படும். காலை மற்றும் மாலையில்தான் தலை காட்டுவாள். அவள் வீட்டின் மாடியிலும் தோட்டம் போட்டிருந்தார்கள். அது ஏற்கனவே முன்னிருந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. செடிக்குத் தண்ணீர் ஊற்றி, கொஞ்சநேரம் அக்காலைப் பொழுதை இதமானக் காற்றோடு அனுபவிக்க இசைவாள். அப்போது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே, ஓரக் கண்ணால் பார்த்தும் பார்க்காததுபோல் பார்த்துவிட்டு நகர்வாள். அவனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. மனத்தில் கதாநாயகனாகவே உருவகித்துக் கொள்வான். அவளும் ஓரக்கண்ணால் பட்டும் படாமலும் சிரிக்கும் விதமென்று, ஓர் ஆழமான எண்ணவோட்டத்தையே, பெரும் ஆலமரமாக உரம்போட்டு வளர்க்கத் தொடங்கினான். அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டாலும், தான் அப்படிச் செய்திருக்கக்கூடாது. வெளியேயும் வந்திருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். கதவினைத் திறந்துகொண்டு, வசந்தகாலத்தில் தன் மூர்க்கத்தனங்களையெல்லாம் வெளிக்காட்டி, பயம், பதற்றத்தைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு சந்தேக மனநிலை வந்திருக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில்தான் சந்தித்திருக்கிறோம். பார்வைகள் ஏராளம். பேச்சுவார்த்தைகூட அந்தளவிற்கு நீளாத காலம். அப்படியிருக்கையில், எடுத்தவுடனே இந்த நடவடிக்கைக்கெல்லாம் உடன்படுவது, சற்று கலக்கத்தையே கொடுத்தது எனலாம். தொடக்கத்தில் அவளைப் பார்த்தவுடன், திருமணம் செய்துகொண்டு நிம்மதியான வாழ்க்கையினை வாழ வேண்டும் என மனத்திற்குள் திட்டம் தீட்டியிருந்தான். அந்தத் தீட்டலே அவனை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தியது. தடுத்து நிறுத்துதலுக்குப் பின்னாகப் பல நெறிமுறைக் காரண வழியினைக் கடைபிடித்திருந்தான். நான் இப்படித்தான் இருக்க வேண்டும். எனக்காக ஒருத்தி இவ்வுலகில் காத்துக்கொண்டிருப்பாள். அவளின் மனத்தை நான் காயப்படுத்துவது, ஏற்றுக்கொள்ளமுடியாத வடுவாகவே படிமமாகிப் போய்விடும். அப்படிமம் என் வாழ்நாளை நிம்மதியில்லாமல் அலைக்கழிக்கும். மனபாரமாகச் சுரண்டிக்கொண்டேயிருக்கும். இரண்டு வாரத்திற்குள்ளே இதெல்லாம் நடந்திருப்பதுதான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவள் பார்த்த பார்வை, நடந்துகொண்ட விதம், எல்லாமே மாயக் கனவாகவே, தினமும் இரவுகளில் எட்டிப் பார்த்துச் செல்லும். நல்லவேளை, தப்புத்தண்டாவிற்கு இடம் கொடுக்கவில்லை. எனக்காக, என் வாழ்க்கையில் பகிரயிருப்பவளுக்கு நேர்மையாக, அவ்வீட்டிலிருந்து வெளியேறியது மகிழ்ச்சியென்று ஒருபுறம் நினைத்தாலும், நீண்ட இடைவெளிக்குப்பின், செடிகளைக் காண வந்திருந்தவளைக் காண நேர்ந்தது. ஏனோ பூக்களெல்லாம் வாடிப்போய் கிடந்தன. தலை நிமிரவே இல்லை. தினமும் சூரியனைப் பார்த்து, இதமாக உடல் ரோமங்களை முத்தமிடும் தென்றலை உள்வாங்கி, யோகாசனமெல்லாம் செய்வாள். இன்று அக்காட்சி விடுமுறையாக மாறிப்போனது. வேகவேகமாக எல்லாவற்றிற்கும் ஊற்றிவிட்டுப் படிகளில் இறங்கும்போது, நான் மாடியில் இருப்பேனென்று முழுமையாகத் தன் முகத்தைத் திருப்பிக் காட்டினாள். ‘குற்றவுணர்ச்சி கலந்த கோபக் கனல் முகத்தில் பயங்கரமாகக் காட்சிக்கொடுத்தது. அந்தப் பார்வையை மனத்திற்குள் உள்வாங்க முடியாமல், சீரணிக்க முடியாமல் தலை குனிந்து தவித்துப்போனான். பெரும் குற்றமொன்றைச் செய்துவிட்டதாக மனம் இப்போது பதபதைத்து என்ன பயன்? என்னைத் தவறாக நினைத்திருப்பாளோ? இல்லை; அப்படியொன்றும் நினைத்திருக்கமாட்டாள். ஒருவேளை நினைத்திருக்கலாம். மாறி மாறித் தோன்றக்கூடிய சிந்தனைகளெல்லாம் அவனைத் தனியாக நின்று பேசிக்கொள்ளும் செயலைத் செய்யத் தூண்டின. குழப்பம் முழுமையாக அவனை ஆக்ரமித்திருந்தது.இந்நேரத்தில் சுகுமாரும் உடனில்லை. அவனிடம் சொல்லியாவது, இதற்கு விடையை எதிர்பார்த்திருக்கலாம். அவன் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. இந்தக் கல்லூரி அப்பாவிற்கு செட்டாகவில்லை என்பதால் சொந்த ஊருக்கே செல்லவிருப்பதாகவும் அங்கிருக்கும் கல்லூரியொன்றில் அப்பாவுக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் போனில் முன்பு சொல்லியிருந்தான். அந்நம்பரைத் தொடர்புகொண்டால் எந்த பதிலும் இல்லை. முயற்சி வீணென்றாகிப்போனது.•அடுத்த நாள் அதிகாலையிலேயே பெரிய வண்டியொன்று தெருவில் சத்தம்போட்டுச் சென்றதைக் காதுகள் உணர்ந்துகொண்டாலும் எழும்பாமலேயே கிடந்தவன், போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான். தூக்கம் வரவில்லை. அவளை எப்போது பார்க்கிறேனோ அப்போது, மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். ‘ஐயம் வெரி சாரி. எனக்கு இதுதான் முதல் தடவ. அதான்’ என்று சொல்லிவிடலாம். ஆனால் அதற்கவள், ‘சரி ஓகே. ஆனா எனக்கு மட்டும் இது பழக்கமோ?’ என்று எதிர்க்கேள்வி கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது? குழப்பமே முகத்தின் முன் வந்து நின்றது. என்ன ஆனாலும் சரி. ஒரு

யாரைத் திருப்திப்படுத்த?

யாரைத் திருப்திப்படுத்த?

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா? ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்.அடுத்த வேளை உணவுக்கான ஆர்டர்கள் ஹோட்டலுக்குச் சென்றிருக்கும்,பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர். படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர். சாப்பிட்ட இலைகளயும் குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார். ஒரு அவசரச் சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென, உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார். மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள். எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார். இத்தனை தூரம் வந்தாச்சு, போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர். தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்.கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும். அடுத்து வரும் நாட்களில், நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும். உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும். ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும். இரண்டு வாரங்களில் உங்கள் மகன், மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்குத் திரும்பிடுவர், ஒருமாத முடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்குச் சிரிப்பார். அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத் துவங்கியிருப்பர்.அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும். மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும். நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்.இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதி கொடுத்தல் மட்டும் மிகச் சிரத்தையாக நடக்கும். கண்மூடித் திறக்கும் இடைவெளியில், வருடங்கள் பல ஓடியிருக்கும். உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது. என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்.உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய் அபூர்வமாய் உங்களைப்பற்றி யாரிடமோ பேசக்கூடும். மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும். மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கிப் பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும். இப்போது சொல்லுங்கள், உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்? பார்த்திபன் கண்ணன்