எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி
ஆகஸ்ட் போராட்ட நினைவு சிறப்புக் கவிதை ஆகஸ்டு மாத இளம் வெயிலின்அகிம்சைக் கூடத்தில்தான்ஒத்துழையாமை உலைக்களம். ஒரு கிழவனின் அகிம்சைஇரும்பை எரியவிட்டுத்தான்பரிசோதிக்கப்பட்டது. உலகப் போரின் நெருக்கடியில்கூடமுகத்தோடு முகமாய் ஒட்டிக் கிடந்தவெள்ளையனின்அதிகார முகமூடி. ஒவ்வொரு இந்தியனின்இதயத்திலும்எரிமலையின் சாம்பல். பக்கத்திலேயே இருந்ததுபகத் சிங்கின்அறிவுத் துருத்தி ஆயுதக் கூடம்.இருந்தும்போர்க்களத்திற்குப் அருகிலேயேபுறமுதுகாளர்களின் கூடாரமும்.மதப் புராணிகங்களின் அம்பறாத்தூணியில்தகதகக்கும் ஜாதி அம்புகள். மார்பில் ரோஜா சூடியவனைமரணத்தைப்போல் பார்த்தார்கள். வேடிக்கைக்காரர்களின் கண்களில்வெறிகள் மினுங்கின“இந்தியச் சிறுமிக்குவெள்ளைக்கார துரையுடன்குழந்தைத் திருமணம்.” நாக்கிலும் முளைத்த நரிப்பற்கள். பசுமாடுகளுக்குப் பாதுகாப்பெனகாடே கைகூப்பிய போதேகள்ளச் சிங்கங்களுக்குக் காடு தானம். கனவு கண்டு தீப்பிடித்த கண்கள்தோண்டியெடுக்கப்பட்டன.நிழலுருவங்கள்இருளின் பூதங்களெனஅகராதிகள் திரிக்கப்பட்டுவிட்டன. ஒரு நாட்டின் கொடித்துணியைநெய்வதற்குமுன்எத்தனை சவத்துணிகளைநெய்ய வேண்டியிருக்கிறது. களைப்பின் உச்சத்தில் கைகள் சோர்ந்துஆயாசமானாள்ஆகஸ்டு ராணி. செய்கூலி சேதாரத்துடன்ஓர் விடுதலை ஆபரணம் செய்யப்பட்டாலும்அணியுமுன்கழுத்தினைக் களவாடியகள்வர்கள். ஆகஸ்டு எரிமலையின் நெருப்பெடுத்துத்தான்ஒவ்வொரு வீட்டுக் கதவிலும்புரட்சியின் எண்கள் எழுதப்பட்டன.ஆனாலும் பொய்யர்களின் முகவரிக்குத்தான்அனைத்து அஞ்சல்களும் போய்ச் சேர்ந்தன. எட்டப்பன்களின்பாஞ்சாலங்குறிச்சிதான் இந்தியா. இப்போதுவெள்ளையனே வெளியேறு என்றால்சிரித்தபடியே அவன் சொல்கிறான்:“இந்தியனே வெளியேறு.” கவிதை: நா.வே.அருள் படங்கள்: இணையத்திலிருந்து