சாகாவரம் தேடு

என் மனதுள் நுழையமுனைந்து முனைந்து என்னால்விரட்டப்படாமல்வாசலில் நிற்பவனே!! உனது அன்பின் ஆழம்மாவலி கங்கையின் நீளத்திலும்நீளமானதுஅறிவேன் நன்கு. என் விழிகளில் விழி நுழைத்துமுகம் புகழ்ந்துபருவத்தின் மீது புராணம் பாடிபாதச்சுவடுகளின் மீதுலவுகிறாய் என் செய்வேன்?உன் மீதுபரிதாபம் மட்டுமேபட முடிகிறது உலகம் நானென்கிறாய் – உலகவிந்தை நானென்கிறாய்கவிதைகளும் காட்சிகளும்அனைத்தின்பமும் நானென்கிறாய்எத்தனை பொய்!!! பகலின் இரவுகளில்நாடு கடத்தப்பட்டுகாடுகளின் சுதந்திரச் சிறைகளில்மனித இயந்திரங்களாய்இருநூறாண்டுகள் இருளுக்குள் உழலும் மக்கள்கூட்டத்திலிருந்துஎழுந்து வந்தவன் நீநினைவுகளை ஞாபகத்திற்கழை. எவனெவன் வாழ்வுக்கோ உதிரம் சிந்திஉழைத்து மரிக்கும்அறியாமைகளுக்குஉனை விட்டால் ஒளிப்பிழம்பு யார்? உலக விழிகளால்மறுதலிக்கப்பட்ட அந்த உலகம்உன்னிடம் எதையெதையோபார்த்திருக்கிறது!!! அதன்காய்ந்து வறண்டதொண்டைகளில்தாகம் ஏக்கம்பசி கனவு! விழிகளுக்கு மிக அருகாமையில்விழித்து நிற்கும்பொறுப்புகள் கடமைகள் துறந்துமேல் வர்க்க இளைஞனாய்வாலிபத்தைசல்லாபத்தி லிடுகிறாய். எத்தனைத் துயரேற்றாள்உன் தாய் உனை ஈன; உனை வளர்க்க??எத்தனை இடர் கடந்தார்உன் தந்தை நீ பள்ளி செல்ல??எத்தனை துன்பமுற்றமக்கள் கூட்டம் உன் மண்ணில்?? விருப்பமில்லா விடுமுறையில் உன்ஏழையூர் விரைகையில்அம் மலையக மனிதரின் விழிகளில்இல்லாமையும் இயலாமையும்இணைத்திசைக்கும்துயர கீதங்களைக்கேட்டிருக்கிறாயா? ஒழுகும் கூரைகளின் கீழ்உறக்கங்களை வழியவிட்டஇரவுகளின் அழுகையொலிகள்எட்டியிருக்கறதா உன் செவிகளுக்கு? பசுமை அடர்ந்த உயர்ந்த மண்ணில்தாழ்வுடைய வறண்டவாழ்வின் சுமைகளைத்தராசிலிட்டிருக்கிறாயா? இனத்தால் பொருளால்சாதியால் நிறத்தால்விலக்கப்பட்டவர்களுக்குவிடுதலைக்காய் முழங்கப்போகும்குரல் யாருடையது?? பரம்பரையைப் பரிசளித்து வளர்த்தமண்ணை மூழ்கடிக்கும்அதிகாரங்களுக்கெதிராய்நிமிர்வது யார்??விடைகாணா வினாக்கள்ஆயிரமிருக்க நீயோ…..வலிமையை இளமையைஎன் நடைபாதையெங்கும்பூக்கள் விரிக்கச் சிந்திக் கொண்டிருக்கிறாய் இளமையின் சுகிப்பைவியர்வையூரியகருப்பு மண்தந்த எழுத்துக்களால்அலங்காரப்படுத்துகிறாய். எப்போது அவர்களின்அழுகை தடுக்கும்ஆயுதம் செய்ய உன் அறிவைக்கருவாக்கப் போகிறாய்??? இங்கு உன்னையும் என்னையும்இணைத்த இப்பெரும்பல்கலைகழக மெனும்அறிவாலயம்மனிதர்களுக்கான மனிதர்களைஉரு செய்யவே உழைக்கிறது. இங்கு மனிதனாவது சாதரணம்!மனிதர்களுக்கான மனிதராவதேசாகாவரம். நீசாகாவரம் பெறுஅப்போதுஉன் காதல்மறுபரிசீலனைக்குட்படலாம்!! ஏனெனில்நான் நம் மண்ணையும் மக்களையுமேசிந்தித்துக் கொண்டிருக்கிறேன் எஸ்தர், மலையகம், இலங்கை