பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

நா. முத்துக்குமார் பிறந்தநாள் நினைவுக் கவிதை சிறகு முளைத்த சிறிய காலங்களில்வான் உயரப் பறந்த உன்னைஇன்னும் பாடலில்தான் தேடுகிறோம்பறவையே எங்கு இருக்கிறாய்? கணையாழியில் ‘தூர்’எழுதிசுஜாதா காதல் கொண்டுமென்பூவாய் மேல் வந்தபறவையே நீ எங்கு இருக்கிறாய்? அம்மையை எழுதி எழுதிஅப்பனுக்குப் பிள்ளையாகி‘ஆனந்த யாழை’ மீட்டியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘அணில் ஆடும் முன்றிலில்’மகனுக்குக் கடிதம் எழுதிவிட்டுஅத்தைகளின் உலகம் போனபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘தெய்வங்கள் எல்லாம்தோற்றே போகும்’தான்உன் மகன் உனக்கு எழுத என்ன செய்வான்?வார்த்தைகளையாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? எழுத்து பழகி எங்களைப் பழகிசத்தம் இல்லாமல் அதிகாலை முத்தம்போல் கடந்தஉன் காதல் கவிதைக்குத் துணை தேடுகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘உனக்கொரு தொட்டில் கட்டிநானே தாயாய் மாறிட வேண்டும்’ என்று சொன்னாயேஉன் தாலாட்டில் நாங்கள்ஆண் தாயாக உறங்குகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘வெயிலோடு உறவாடி’ பால்யத்தையோ சொன்னாய்வேறெங்கு உனக்கு உறவு?வா விளையாடுவோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘விழிகளில் ஒரு வானவில்இமைகளைத் தொட்டுப் பேசுதே’ என்றாய் நீ இல்லாமல் சிறு புல்லின்மீது விழுந்தபனித்துளியாய் இருக்கிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? “கனாக் காணும் காலங்கள்’ இல்லாமல்இனி காதலிக்க முடியுமா இந்தத் தலைமுறை?பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘உனக்கென இருப்பேன்’ என்று முடித்திருக்கலாம்‘உயிரையும் கொடுப்பேன்’ என்றாய்‘வார்த்தைகள் இல்லை என்றால்உன் மவுனங்கள் போதும்’ என்றபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘சுற்றும் விழிச் சுடராய்‘மண்ணை உண்ணும் பூக்கள்’ வரைந்த உன்னைவிழுங்கிய உலகில் தேடுகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘ஒரு பாதி கதவு நீயடி’ என்றுதாண்டவம் ஆடியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? “உன் பேரைச் சொல்லும்போதேஉள் நெஞ்சில் கொண்டாட்டம்..உன்னோடு வாழத்தானே எந்நாளும் போராட்டம்’ என்றபறவையேஇன்னும் கொஞ்சம்போராடியிருக்கலாம் அல்லவா?