கடவுளும் முரண்களும்
கவிதைகள் பன்னாட்டு நிறுவனத்தில் எனக்குநாளை நேர்முகத் தேர்வு இருக்கிறதுஉனது காணிக்கையான என் முடியைஇன்று இறக்க முடியாது என்றஎன் கோரிக்கைக்குஆயிரம் ரூபாய் நன்கொடைஅளித்தால் போதும் என்றஉன் பூசாரிக்குநான் என்ன பெயர் வைப்பேன்?நீயும்தான் என்ன பெயர் வைப்பாய்? குதர்க்கமாகப் பேசுகிறேன் என்றுநினைக்க வேண்டாம் ஒன்று பிச்சை இடுகிறீர்கள் – அல்லதுபிச்சை எடுக்கிறீர்கள் கடவுளைஉங்களோடு தொழுவதில்கூடஎனக்கு முரண்பாடு இருக்கிறது வேண்டா வெறுப்பாகஒவ்வொரு முறையும்ஏதாவது ஒரு தேய்வத்தின் முன்நிறுத்துகிறார்கள் என்னை அவர்கள் வேண்டுகிறார்கள்எனக்கோ கேள்விகள்தான் பிறக்கின்றன ஒருபோதும்எழுதுகிறவனுக்குக் கடவுள் இல்லை என்றுயார் சொல்வது?அப்படி ஒருவேளை இருந்தால்அவன் எழுத்தாளன் இல்லை என்பதையும்யார் சொல்வது?