புதிய நான்
கவிதை என்னைப் புதிதாக உணர்கிறேன்ஏனென்று புரியவில்லையானாலும்உங்கள் மீதான அன்பு குறைந்ததில்லை மிகவும் அழகாகத் திகழும்இரவுப் பயணங்களுக்குப் பின் நிகழும்விடியல் போலவே உள்ளதுஇந்தச் சமநிலை விடிந்த பின்னரும் சில கதைகளும்சில பயணங்களும்மனதிலிருந்து மறைவதில்லை நானும் நீங்களும்தொலைதூரத்தில் இருந்தாலும்நாம் சந்தித்த நாட்களையெல்லாம்நினைவுப் பூக்களாகவோமுட்களாகவோ உணரச் செய்யும்இனிவரும் இரவுகள் காலம்விரைவில் பதில் சொல்வதில்லைஇது கனவா? காதலா? நட்பா? எனும்குழப்பத்திலேயே முடிந்துவிடாதுநம் கதை இப்பொழுதாவதுஇதைத் திறந்து படித்துப் பாருங்கள்காகிதத்தின் உணர்வைஉங்கள் மூச்சு சுவாசிக்கும் நான் கிளம்புவதற்கான நேரம்நெருங்கிக்கொண்டுள்ளதுஉங்களுடன்ஒரு மிடறு தேநீர் அருந்தவோபுகைப்படம் எடுக்கவோஆசைதான்காலமும் காத்திருக்கிறது மீண்டுமொரு முறைநாம் சந்திக்கும் நாட்களுக்காய்இவ்விடத்திலிருந்துபுன்னகையுடன் பிரிகிறேன்ஏதோவொன்றை உங்களிடம் விட்டு..